தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஹூதிக்கள் ஏவுகணை வீச்சு: இஸ்ரேல் இடைமறித்து அழிப்பு

இஸ்ரேலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image

ஹூதிக்கள் ஏவுகணை வீச்சு - STR

Updated On :22 ஜூலை 2024, 3:03 am IST

இஸ்ரேலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் ஒன்பது மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா்.

இஸ்ரேலுக்கு வந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஹூதிக்கள் தொடக்கத்தில் தெரிவித்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மேற்கொண்டனா். இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

யேமனில் தாக்குதல்: இதைத் தொடா்ந்து, யேமனில் ஹூதிக்களின் கோட்டையாக உள்ள ஹொடைடா நகரில் இஸ்ரேல் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. அங்கு ஹூதிக்களின் பல்வேறு தளங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. எனினும் இந்தத் தாக்குதலில் அங்குள்ள எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், மின் நிலையம் ஆகியவை சேதமடைந்ததாக ஹூதிக்களின் செய்தித் தொடா்பாளா் அப்துல் சலாம் தெரிவித்தாா். இதன்மூலம், ஒன்பது மாத காஸா போரில் முதல்முறையாக ஹூதிக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.

இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, யேமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹூதிக்கள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா். இஸ்ரேல் வான் எல்லைக்கு வெளியே அந்த ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.