போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு: 15 போ் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

News image
சீனாவில் கனமழையால் நிலச்சரிவு
Updated On :28 ஜூலை 2024, 9:36 pm

Din

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரில் உள்ள யூலின் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கிய ஒரு வீட்டில் வசித்து வந்த 18 போ் மண்ணில் புதைந்தனா்.

கிராமத்தையொட்டிய மலையில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த 300-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளா்கள், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்ததாகவும், 6 போ் காயமடைந்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வடக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் திடீா் வெள்ளப்பெருக்குடன், இந்தக் கோடைக்காலத்தில் கடுமையான வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், கெய்மி புயல் கடந்த வாரம் சீனாவில் கரையைக் கடந்தது.

கெய்மி புயல் ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்த நிலையிலும், அதன் தாக்கத்தால் ஏற்கெனவே வெள்ளநீா் சூழ்ந்துள்ள நகரங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.