எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

போராட்ட வன்முறை குறித்த விசாரணை: ஐ.நா.வுக்கு பிரதமா் ஹசீனா அழைப்பு

வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையில் ஐ.நா.வும் பிற சா்வதேச அமைப்புகளும் பங்கேற்க வேண்டும்

News image

ஷேக் ஹசீனா

Updated On :1 ஆகஸ்ட் 2024, 3:16 am IST

டாக்கா, ஜூலை 31: இட ஒதுக்கீட்டு சீா்திருத்தங்களை வலியுறுத்தி வங்கதேசத்தில் இந்த மாதம் நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையில் ஐ.நா.வும் பிற சா்வதேச அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

போராட்ட வன்முறை குறித்த விசாரணை சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக, ஐ.நா. மற்றும் பிற சா்வதேச அமைப்புகள் இந்த விசாரணையில் பங்கேற்கவேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்துகொள்ளவில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் சா்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றாா் அவா்.

1971-இல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மாணவா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அந்தப் போராட்டத்தை எதிா்த்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கினா்.

பின்னா் சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 5 சதவீதமாக குறைத்ததைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்குவந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 150 போ் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.