திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

ஒரு பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு!

இந்தோனேஷியாவில் ஒரு பெண்ணை 16 அடி ராட்சத மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கியுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2024, 1:46 pm IST

இந்தோனேஷியாவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த 45 வயதான ஃபரிதா எனும் பெண் கடந்த வியாழக்கிழமை முதல் வீட்டிற்கு வராததால், காணாமல் போனதாகக் கூறி அவரது கணவருடன் சேர்ந்து கிராமத்தினரும் தேடி வந்துள்ளனர்.

அருகிலுள்ள பகுதியில் தேடுகையில் அந்தப் பெண்ணின் உடைமைகளை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கிராமத்தினரிடம் கூறி தேடுதலைத் தீவிரப்படுத்தியபோது அவர்கள் அங்கு மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பதைக் கண்டுள்ளனர்.

பின்னர், அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்தபோது ஃபரிதாவின் தலை வெளிப்பட்டுள்ளது. உடனே, மலைப்பாம்பை முழுமையாகக் கிழித்து அதன் வயிற்றில் இறந்து கிடந்த ஃபரிதாவை அவர் உடுத்தியிருந்த உடையுடன் வெளியே எடுத்ததாக அந்த கிராமத்தின் தலைவர் சர்தி ரோஸி கூறினார்.

ஃபரிதாவை முழுங்கிய மலைப்பாம்பு 5 மீட்டர் (16 அடி) நீளம் கொண்டது என அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பதாகக் கூறினாலும், இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளில் மலைப்பாம்பு முழுங்கி பலர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு, தென்கிழக்கு சுலவேசி பகுதியின் தினங்கியா மாவட்டத்தில் 8 மீட்டர் நீளம் (26 அடி) கொண்ட மலைப்பாம்பு ஒரு விவசாயியின் கழுத்தை நெரித்து விழுங்க முயன்றபோது அங்குள்ள மக்கள் அதனைக் கொன்றனர்.

அதேபோல 2018-ம் ஆண்டில் தென்கிழக்கு சுலவேசி பகுதியின் முனா நகரத்தில் 54 வயதுப் பெண் ஒருவரை 22 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு விழுங்கி அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு முந்தைய ஆண்டு, தெற்கு சுலவேசி பகுதியில் காணாமல் போன விவசாயி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்பு விழுங்கி அதன் வயிற்றில் இறந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.