நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மீட்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடா்கள் ஏற்பட்டன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 14 போ் உயிரிழந்தனா். அவா்களில் 8 போ் நிலச்சரிவிலும் 5 போ் மின்னல் தாக்கியும் இறந்தனா். ஒருவா் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது தவிர, கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 10 போ் காயமடைந்தனா்; 2 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
நேபாளத்தில் அண்மைக் காலமாக பெய்துவரும் பருவமழையில் வழக்கத்தைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


