சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

போர் நிறுத்த உடன்படிக்கை இழுபறி: எகிப்து

பேச்சுவார்த்தை இழுபறி; இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் முரண்பாடு

News image
கான் யூனிஸில் இருந்து வெளியேறும் மக்கள்- AP
Updated On :7 மார்ச் 2024, 10:21 am

DIN

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றும் வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட மத்தியஸ்தம் செய்து வரும் நாடுகள், இந்த தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் தொடங்குவதற்கு முன்பாக எட்டப்பட வேண்டும் என முயற்சித்து வருகின்றன.

ஹமாஸ் உடன்படிக்கையின் முக்கிய விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டாலும் நிரந்த போர் நிறுத்தத்துக்கு படிப்படியாக எட்டப்படும் ஒப்புதலை எதிர்பார்ப்பதாக எகிப்து அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், தற்போதைக்கு ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிணையாக வைத்துள்ளவர்களில் 40 கைதிகளை விடுவிக்க பேசப்பட்டது.

கான் யூனிஸில் தாக்கப்பட்ட வீடுகளின் முன்பு பாலஸ்தீனர்கள்

கான் யூனிஸில் தாக்கப்பட்ட வீடுகளின் முன்பு பாலஸ்தீனர்கள்

காஸாவில் இருந்து இஸ்ரேல் முற்றிலும் வெளியேறும் வரை எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிக்க போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீன கைதிகளின் விடுதலையை (வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உள்பட) ஹமாஸ் கோரி வருகிறது.

இஸ்ரேல் பகிரங்கமாக மறுத்ததோடு தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த பிறகு ஹமாஸை வேரோடு அழிக்கும் வரை தங்கள் தாக்குதல் தொடரும் என தெரிவித்தது.

இரு தரப்புக்கும் மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் உடன்படிக்கையை நிறைவேற்ற இஸ்ரேல், ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.