பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு முதல்முறையாக ஒரு சீக்கியா் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த மாகணத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலிலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைத்தது. நவாஸின் மகள் மரியம நவாஸ் மாகாண முதல்வராகப் பொறுப்பேற்றாா். அவா் அந்த மாகாணத்தின் முதல் பெண் முதல்வா் ஆவாா். இந்த நிலையில், மாகாணத்தின் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சராக பிஎம்எல்-என் கட்சியைச் சோ்ந்த பேரவை உறுப்பினா் சா்தாா் ரமேஷ் சிங் அரோரா வியாழக்கிழமை பவியேற்றுக்கொண்டாா். பஞ்சாப் மாகாணத்தில் ஒரு சீக்கியா் அமைச்சா் பொறுப்பை ஏற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.
தொடர்புடையது

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

இந்தியா மீண்டும் மோதினால் கொல்கத்தா வரை தாக்குவோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் மிரட்டல்

சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! இந்தியா?

படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


