மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாடம் கற்பிக்கும் ஏஐ ஆசிரியர்: கேரளத்தில் புது முயற்சி!

கேரள பள்ளியின் புது முயற்சி: பாடம் கற்பிக்கும் திறன் கொண்ட ஏஐ ஆசிரியர்!

News image
ஏஐ ஆசிரியர்- Instagram
Updated On :7 மார்ச் 2024, 12:23 pm

DIN

செய்யறிவு என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல துறைகளிலும் அசாத்திய பாய்ச்சலை உண்டாக்குm என கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேரடியாக மனிதர்களால் மட்டுமே செய்ய கூடிய வேலைகளையும் திறன்மிகுந்த ஏஐ நிரல் செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளி, நாட்டிலேயே முதன்முறையாக ஏஐ ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த ஆசிரியர் பாடம் எடுக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் மூன்று மொழிகளில் உரையாடக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உருவாக்கிய மேக்கர் லேப்ஸ் என்கிற நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேடிசிடி உயர்நிலைப்பள்ளியில் இதனை, விண்வெளி வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே. ராஜீவ் தொடங்கி வைத்துள்ளார்.

மேக்கர் லேப்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டப்பட்ட விடியோவில் ஏஐ இயந்திர ஆசிரியர் மாணவர்களுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு ‘ஐரிஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். கைகளை அசைத்து பாடம் எடுக்கவும் விளக்கவும் மாணவர்களுடன் உரையாடவும் ஐரிஸால் இயலும் என்கிறார்கள் உருவாக்குநர்கள்.

ஏஐ ஆசிரியருக்கு 4 சக்கரங்கள் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் நகர இயலும். பாடம் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு தீங்கிழைக்கும்/ பொருத்தமற்ற வன்முறை, போதை பொருள்கள் தொடர்பான சொற்கள் உச்சரிக்கப்படாதவாறு இதன் செயலியில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்வியும் தொழில்நுட்பமும் இணையும் எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு மாணவர்களுக்கு புதுவித கற்றல் அனுபவத்தை அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.