ஹைதராபாத்: சிகாகோவில் உயர்கல்வி பயின்றுவந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் ரூபேஷ் சந்திரா மே 2ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விஸ்கோன்சின் பகுதியில் உள்ள கான்கோர்டியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த மாணவர் மே 2ஆம் தேதிக்குப்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சிகாகோவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ரூபேஷ் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய தொடர்ந்து காவல்துறை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபேஷ் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு சிகாகோ காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர் காணாமல் போனதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 2ஆம் தேதி மதியம், வாட்ஸ்ஆப் காலில், தனது மகனுடன் பேசியதாக, அவரது தந்தை தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஏதோ வேலையாக இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் கூறி அழைப்பைத் துண்டித்திருக்கிறார். பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை, வாட்ஸ்ஆப் ஆஃப்லைனில் சென்றுவிட்டது என்று கூறப்படுகிறது.
அவருடன் தங்கியிருந்த நண்பர்களை, குடும்பத்தினர் தொடர்புகொண்டு கேட்டபோது, யாரோ சிலரை அவர் சந்திக்கச் சென்றதாகவும் அவர்கள் யார் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரூபேஷின் குடும்பத்தினர் அமெரிக்க தூதரகத்திலும் தொடர்பு கொண்டு மகன் காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவு விவகாரத் துறைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ரூபேஷின் சகோதரர் எக்ஸ் பக்கத்தில் தங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் சிகாகோவில் மாயமானது குறித்து கடிதம் எழுதி அதனை வெளியிட்டு, வெளியுறவு விவகாரத் துறையையும் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா படித்து என்னவாக விரும்பினார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்...

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!

ஹிட்லரிடம் உத்வேகம் பெற்று திட்டத்திற்குப் பெயர்: ரேவந்த் ரெட்டி மீது எழும் விமர்சனங்கள்!






