ஜெர்மன் அளித்துள்ள ஆயுதங்களை ரஷிய பிராந்தியத்தில் உக்ரைன் பயன்படுத்தலாம என ஜெர்மன் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹேபஸ்ட்ரீட் வெள்ளிக்கிழமை பெர்லினில் வெளியிட்டார்.
சமீப வாரங்களில் உக்ரைன் தனது ஆதரவு நாடுகளிடம் அவர்கள் வழங்கிய ஆயுதங்களை ரஷிய பிராந்தியத்தில் ரஷிய படையை எதிர்கொள்ள பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டு வந்தது.
இதேபோல அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உக்ரைன், ரஷிய பிராந்தியத்தில் தங்கள் சார்பாக அளிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டன.
பல மேற்குலக நாடுகள் தாங்கள் அளிக்கும் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை உக்ரைன் பிராந்தியத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தன.
ரஷியாவுடனான மோதல் விரிவடைவதை தடுக்கவும் நேரடியாக உக்ரைன் நட்பு நாடுகள் போரில் ஈடுபடுவதை தவிர்க்கவும் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த கட்டுப்பாடுகளை ரஷியா தனக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டு எல்லைக்கு அருகில் படையெடுத்து வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உக்ரைனில் ரஷியா 3-ஆவது நாளாக தாக்குதல்

உக்ரைன் சிறுவா்கள் கடத்தல்: ரஷிய அதிகாரிகளுக்கு ஐரோப்பா தடை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



