மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஹிஸ்புல்லா உயர்நிலை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி கொல்லப்பட்டார்.

News image
இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த தெற்கு லெபனான் பகுதி.
Updated On :4 நவம்பர் 2024, 11:08 am

DIN

இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹஸன் நசரல்லா இஸ்ரேல் ராணுவத்தால் கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக நயீம் காஸிம் தலைமையேற்றார்.

கடந்த சில வாரங்களில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி அபு அலி ரிதா இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. .

இஸ்ரேல் ராணுவத்தின் மீது ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் டேங்கர்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை செயல்படுத்துவது, ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளில் அபு அலி ரிதா செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு எதிராக காஸாவில் இஸ்ரேல் போரை நடத்திவருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலின் படைகளுக்கும் கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு போர் தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பினர் காஸாவில் உள்ள ஹமாஸுக்கு ஆதரவாக தினமும் வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.