தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ரஷியா ஆயத்தம்?

அமெரிக்க தூதரகம் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்... உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்.!

News image

AP

Updated On :20 நவம்பர் 2024, 5:21 pm IST

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ளது. ரஷிய படைகள் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரகம் மூடப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு தாக்குதல்கள் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தற்காத்துக்கொள்ள ஏதுவாக, அபாய ஒலி எழுப்பப்படும், அவ்வாறு சைரன் சத்தம் கேட்டால் கீவ் நகரிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களை தற்காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ராணுவ உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ள நவீன ஏவுகணைகளை பயன்படுத்த அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் ரஷியாவின் உள்புறப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நிகழ்த்தியது. ரஷியா உக்ரைன் மீது ராணுவ தாக்குதல்களை ஆரம்பித்து நேற்றுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டதையொட்டி உக்ரைன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக உக்ரைனிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.