உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!
உக்ரைனில் வான்வழி தாக்குதலுக்கு ரஷியா ஆயத்தம்: ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!

AP

AP
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ரஷிய படைகள் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா கீவ் நகரிலுள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ரஷியா ஆயத்தம்?
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இஸ்ரேல் தூதரகம் கீவ் நகரில் செயல்படுவதாக அந்நாட்டு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...