புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!

உக்ரைனில் வான்வழி தாக்குதலுக்கு ரஷியா ஆயத்தம்: ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!

News image

AP

Updated On :20 நவம்பர் 2024, 5:24 pm

DIN

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷிய படைகள் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா கீவ் நகரிலுள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

Story image

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இஸ்ரேல் தூதரகம் கீவ் நகரில் செயல்படுவதாக அந்நாட்டு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.