ஐஸ்லாந்தில் ஒரு வருடத்தில் 7-வது முறை வெடித்த எரிமலை!

எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பில்லை..
எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு
Published on
Updated on
1 min read

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்றிரவு வெடித்துச் சிதறியுள்ளது.

ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

எரிமலையானது நேற்று மாலை வெடிக்கத் தொடங்கி நிலையில் தொடர்ந்து இரவு 11.14 மணிக்கு சுமார் 3 கி.மீ (1.8 மைல்) நீளமுள்ள பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெடித்ததை விட இது கணிசமாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இருப்பினும் கிரிண்டாவிக் நகரம் உள்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் எரிவாயு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை
ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை

தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே 50 கி.மீ(30 மைல்) தொலைவில் வசிக்கும் சுமார் 3,800 மக்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய ஒருவருடத்திற்குள் ஐஸ்லாந்தில் ஏழாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக்கின் மேலே அமைந்திருக்கும் ஐஸ்லாந்து சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கிறது. முன்னதாக கடந்த 2010ல் எரிமலை வெடித்ததில், பல மாதங்களுக்கு விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com