செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

புயல் சின்னம்: இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

24 மணி நேரத்தில் 75 மி.மீ. கொட்டித் தீர்த்துள்ளது.

News image

AP

Updated On :27 நவம்பர் 2024, 11:50 pm IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 75 மி.மீ. கொட்டித் தீர்த்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளில் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(நவ. 27) தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கரைதீவு நகர் அருகே பள்ளிக் குழந்தைகள் 11 பேரை ஏற்றி வந்த டிராக்டர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் 6 குழந்தைகளும், டிராக்டர் ஓட்டுநரும், உடன்சென்ற மற்றொருவரும் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் சில பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு டோக்கியோவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், மாலேவிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆகியவை மோசமான வானிலையால் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேபோல, ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் கோழிக்கோட்டுக்கு திருப்பிவிடப்பட்டது. மாலேவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும், அபுதாபியிலிருந்து புறப்பட்ட எத்தியாட் ஏர்வேஸ் விமானமும் மட்டாலாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

கனமழை தொடர்ந்து நீடித்தால், 4 மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்(என்பிஆர்ஐ) எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.