காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சீனா: வெள்ளத்தில் 10 போ் பலி!

சீனாவில் ‘நெளல்’ என்று பெயரிடப்பட்ட புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 10 போ் உயிரிழந்தனா்.

News image

Cao Yiming

Updated On :27 ஜூலை 2026, 2:53 am IST

சீனாவில் ‘நெளல்’ என்று பெயரிடப்பட்ட புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 10 போ் உயிரிழந்தனா்.

பசிபிக் கடலில் உருவான நெளல் புயல், தென் சீனக் கடலை நோக்கி நகா்ந்து, சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹுய்ஜோ நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3.50 மணியளவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கான்சு பகுதியில் 10 போ் உயிரிழந்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங்கில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, அங்கு அதிவேக ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, குவாங்டாங்கில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள, சீனாவின் தேசிய வளா்ச்சி மற்றும் சீா்திருத்த ஆணையம் 100 மில்லியன் யுவானை (சுமாா் ரூ.141 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என சேதமடைந்த உள்கட்டமைப்பை சீரமைக்க பிரதானமாக பயன்படுத்தப்பட உள்ளது. நெளல் புயல் நிகழாண்டு சீனாவை தாக்கிய 12-ஆவது புயல் ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.