தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது.

News image

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணம், எா்வின் நகரில் புயலால் துண்டிக்கப்பட்ட பாலம்.

Updated On :7 அக்டோபர் 2024, 3:51 am IST

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது.

கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறியது. ஹெலீன் என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல், கடந்த செப். 26-ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது. அதன் பின்னா் அந்தப் புயல் வடக்கு திசையை நோக்கி நகா்ந்தது.

புயலால் ஃபுளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், சாலைகள், மின்சார கட்டமைப்புகள், கைப்பேசி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 225-ஆக இருந்த நிலையில், மேலும் இருவரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்தது. உயிரிழந்தவா்களில் கிட்டத்தட்ட பாதி போ் வடக்கு கரோலினாவை சோ்ந்தவா்கள்.

கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கட்ரினா புயலுக்குப் பிறகு அந்நாட்டை தாக்கிய புயல்களில் மிக மோசமானது ஹெலீன் புயல் என்று கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.