அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எங்களின் முழு பலத்துடன் லெபனானை ஆதரிப்போம்: ஈரான் அரசு!

ஈரான் தனது முழு பலத்துடன் லெபனானை ஆதரிக்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

News image
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலீபாஃப்
Updated On :13 அக்டோபர் 2024, 7:16 am

DIN

ஈரான் தனது முழு பலத்துடன் லெபனானை ஆதரிக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலீபாஃப் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டில் லெபனான் சபாநாயகர் நபி பெர்ரி உடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர், “லெபனான் அரசின் மக்கள், இஸ்லாமிய பாதுகாப்புத் தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு ஈரான் எப்போதும் முழு பலத்துடன் தனது ஆதரவைத் தெரிவிக்கும்” என அவர் கூறினார்.

மேலும், போரினால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு அரசாங்கத்தின் மேற்பார்வையில் உதவிகளை வழங்க ஈரான் தயாராக உள்ளதாகக் கூறிய அவர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசருல்லாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

லெபனானுக்கு ஈரான் உதவத் தயராக இருப்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக லெபனானுக்கு வருகை புரிந்த ஈரான் சபாநாயகர், இஸ்ரேல் கடந்த வியாழனன்று (அக். 10) தாக்குதல் நடத்திய பெய்ரூட் நகரின் அல்-நவுரி பகுதியைப் பார்வையிட்டார். இங்கு நடத்தப்பட்டத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டு 117 பேர் காயமடைந்தனர்.

பின்னர் லெபனான் பிரதமர் நஜீப் மிகாதியைச் சந்தித்த அவர், தற்போது லெபனான் அரசு போர்நிறுத்தம், இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், லெபனான் மக்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.

அத்துடன், லெபனான் அரசு தெற்குப் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்துவதுடன், இந்தப் பிரச்னையில் தீர்வு காண இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுடனும் தேவையான தொடர்புகளை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

கடந்த சில வாரங்களாக லெபனானில் தொடர்ந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.