ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கமலா ஹாரிஸுக்கு இளம் வாக்காளர்கள் ஆதரவா?

கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு

News image

டெய்லர் ஸ்விஃப்ட் - கமலா ஹாரிஸ்

Updated On :11 செப்டம்பர் 2024, 9:42 am IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார், பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணியளவில் டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான நேரடி விவாதம் தொடங்கியது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு, தான் வாக்களிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார், பிரபல பாப் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட்.

டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குதான் நான் வாக்களிக்கப் போகிறேன். ஏனென்றால், அவர் உரிமைகளுக்காக போராடுகிறார்.

அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என்று நினைக்கிறேன். நாம் அமைதியால் வழிநடத்தப்பட்டால், இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இளம் வாக்காளர்கள் பலரும் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான விவாதத்தை அடிப்படையாக வைத்தே யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் முடிவும் செய்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.