3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கமலா ஹாரிஸுக்கு இளம் வாக்காளர்கள் ஆதரவா?

கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு

டெய்லர் ஸ்விஃப்ட் - கமலா ஹாரிஸ்

Published On :11 செப்டம்பர் 2024, 9:47 am IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார், பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணியளவில் டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான நேரடி விவாதம் தொடங்கியது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு, தான் வாக்களிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார், பிரபல பாப் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட்.

டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குதான் நான் வாக்களிக்கப் போகிறேன். ஏனென்றால், அவர் உரிமைகளுக்காக போராடுகிறார்.

அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என்று நினைக்கிறேன். நாம் அமைதியால் வழிநடத்தப்பட்டால், இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இளம் வாக்காளர்கள் பலரும் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான விவாதத்தை அடிப்படையாக வைத்தே யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் முடிவும் செய்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.