டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

டிரம்ப்பின் கோல்ஃப் திடலில் 12 மணிநேரத்தை செலவிட்ட நபர்!

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர், சம்பவத்தன்று கோல்ஃப் திடலில் 12 மணிநேரத்தை செலவிட்டதாகத் தகவல்

டொனால்ட் டிரம்ப் / கோல்ஃப் திடலின் வெளிப்புறம் - AP

Published On :16 செப்டம்பர் 2024, 10:32 pm IST

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர், சம்பவத்தன்று கோல்ஃப் திடல் அருகே 12 மணிநேரத்தை செலவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள வெஸ்ட் பாம் கடற்கரை அருகே டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபர்கள் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

12 மணிநேரம் காத்திருப்பு

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கோல்ஃப் திடல் அருகே சுமார் 12 மணிநேரம் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் கோல்ஃப் விளையாடச் செல்லும் திடலில் வளர்ந்திருந்த புதருக்குள் ஏகே ரக துப்பாக்கி கிடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி முதல் கோல்ஃப் திடல் அருகே முகாமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்புக்கு கடந்த அதிபர் தேர்தலில் அந்த நபர் வாக்களித்திருந்ததும், இதனையடுத்து அவரின் செயல்பாடுகளால் அந்த நபர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல்பிரசாரத்தில் டிரம்ப் ஈடு பட்டபோது அவர் மீது துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் பெரும்பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிசார்பில் டிரம்ப் போட்டி யிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.