துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த நபர்கள் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இருந்த இடத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதுதொடர்பான வதந்திகள் பரவுவதற்கு முன்னர் நான் உங்களுக்கு இதனைக் கூற விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கின்றேன்.
எனது வேகத்தை எதுவும் குறைக்காது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்வதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர் புதின், ஸெலென்ஸ்கி: டிரம்ப்

வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

நான் சோர்வாக இருக்கக் காரணம் இதுதான்: விஷ்ணு விஷால்

நான் அப்படிப்பட்டவன் இல்லை.... மன்னிப்பு கேட்ட மகேந்திரன்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



