மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வறட்சியால் உணவுப் பற்றாக்குறை: இறைச்சிக்காக 200 யானைகளைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு

ஜிம்பாப்வேயில் கடும் வறட்சியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளைக் கொல்ல முடிவு

News image
கோப்புப் படம்
Updated On :17 செப்டம்பர் 2024, 8:34 pm

DIN

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி காரணமாக பட்டியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக 200 யானைகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஜிம்பாப்வே நாடு முழுவதும் வனவிலங்குக் காப்பகங்களில் வசிக்கும் 200 யானைகளைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்திட்டத்தை வகுத்துவருகிறோம்.

கொல்லப்படும் யானைகளின் இறைச்சி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும். நாடு கடுமையான பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ள சூழலில், வனவிலங்குக் காப்பகங்களில் யானைகளின் நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

54,000 யானைகள் மட்டுமே வசிப்பதற்கு இட வசதியுள்ள ஜிம்பாப்வேயில் தற்போது 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன என்றாா் அவா்.

ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா ஆகிய ஐந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அந்த வகையில், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் யானைகளைக் கொண்டுள்ள பிராந்தியமாக இது திகழ்கிறது.

ஜிம்பாப்வேயின் அண்டை நாடான நமீபியாவிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பதற்காக 83 யானைகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு அண்மையில் முடிவெடுத்தது. அதனைப் பின்பற்றியே ஜிம்பாப்வேயும் 200 யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது.

வறட்சி காரணமாக நீா்நிலைகள் வற்றிப் போவதால், வனப் பகுதிகளில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு யானைகள் வருவதும் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஜிம்பாப்வேயில் 50 போ் யானை தாக்கி உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.