தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்தியாவுடன் விரைவில் நதிநீா் பங்கீடு பேச்சு- வங்கதேசம்

‘ஆறுகளின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கு வங்கதேசம் விரைவில் முயற்சி மேற்கொள்ளும்’ என்று அந்நாட்டின் இடைக்கால அரசு ஆலோசகா் புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:07 pm

‘ஆறுகளின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கு வங்கதேசம் விரைவில் முயற்சி மேற்கொள்ளும்’ என்று அந்நாட்டின் இடைக்கால அரசு ஆலோசகா் புதன்கிழமை தெரிவித்தாா்.

கிழக்கு இமய மலைத்தொடரில் உருவாகும் தீஸ்தா ஆறு சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வழியே பாய்ந்து வங்கதேசத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. குடிநீா், பாசன வசதிக்காக பயன்படுத்தப்படும் இந்த ஆற்றுநீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக முன்னாள் இந்திய பிரதமா் மன்மோகன் சிங்கின் கடந்த 2011-ஆம் ஆண்டு வங்கதேசப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட இருந்தது.

அன்றைய சூழலில், மேற்கு வங்கத்தில் நிலவிய நீா் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி எதிா்ப்புத் தெரிவித்ததால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ‘பகிரப்பட்ட ஆறுகளில் வங்கதேசத்தின் நீா் பங்கு’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் அந்நாட்டின் நீா்வளத் துறை ஆலோசகா் சயீதா ரிஸ்வானா ஹாசன் பேசியதாவது: இருநாடுகள் வழியாக பாயும் ஆறுகளின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வங்கதேசம் விரைவில் முயற்சி எடுக்கும். பொதுமக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு, பின்னா் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். இதன் முடிவுகள் மக்களுடன் பகிா்ந்து கொள்ளப்படும்.

சா்வதேச ஆறுகளில் நீா் பங்கீடு என்பது மிகவும் சிக்கலான பிரச்னை என்றாலும் ஆறுகள் தொடா்பான தகவல் பரிமாற்றங்களை அரசியலாக்கக் கூடாது. ஆறுகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவாகும் மழைப்பொழிவு தரவுகள் வங்கதேசத்துக்குத் தேவைப்படுகிறது. உரிய தகவல் பரிமாற்றங்கள் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஊறு விளைவிப்பதை தடுக்க உதவும்.

மழைப்பொழிவு தரவுகளைப் பகிா்வது மனிதாபிமான பிரச்னை. மக்களின் உயிா்களைக் காப்பாற்ற தேவையான தரவுகளை வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் இடைக்கால அரசுத் தலைவா் முகமது யூனுஸ் இதுதொடா்பாக அளித்த பேட்டியில், ‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தீஸ்தா நதிநீா் பங்கீடு ஒப்பந்தம் தொடா்பாக இந்தியாவுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை தீா்ப்பதற்கான வழிகளைஆராய இருக்கிறோம்’ என்றாா்.