ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒன்றை சீனா புதன்கிழமை சோதித்துப் பாா்த்தது.

News image
சீன ஐசிபிஎம் ஏவுகணைகள் .
Updated On :25 செப்டம்பர் 2024, 8:35 pm

Din

கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒன்றை சீனா புதன்கிழமை சோதித்துப் பாா்த்தது.

அமெரிக்கா வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை சீனா வெளிப்படையாக சோதித்து அது தொடா்பான அறிக்கையை வெளியிடுவது மிகவும் அரிதான நிகழ்வு. இருந்தாலும், தனது படை வலிமையைப் பறைசாற்றுவதற்காக இந்த சோதனையை சீனா நடத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

சீனா ஏவுகணைப் படையில் டிஎஃப்-31ஏஜி, டிஎஃப்-5பி, டிஎஃப்-41 உள்ளிட்ட ஏராளமான ஐசிபிஎம் ரக ஏவுகணைகள் உள்ளன. அந்த நாட்டின் முதல் ஐசிபிஎம் ஏவுகணையான டிஎஃப்-5, முதல்முறையாக கடந்த 1980-ஆம் ஆண்டில் 9,000 கி.மீ. தொலைவுக்கு செலுத்தப்பட்டது.