ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 22-ஆக அதிகரிப்பு

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:42 pm

Din

பாகிஸ்தானில் மேலும் ஒரு குழந்தைக்கு போலியா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டு மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழைந்தைகளின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 மாத ஆண் குழந்தைக்கு டபிள்யுபிவி-1 வகை போலியோ தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து இந்த நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு போலியோ உறுதி செய்யப்பட்ட 22 குழந்தைகளில், பயங்கரவாத பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 15 போ் என்று அதிகாரிகள் கூறினா்.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்ரனா்.

குழந்தைகளை நிரந்த ஊனமாகும், சில நேரங்களில் உயிரையே பறிக் கூடிய போலியோ நோய் உலகின் மற்ற பகுதிகளில் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.