இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
AP
Published on
Updated on
1 min read

இஸ்ரேலுக்கு உறுதுணையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அங்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com