எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டெஸ்லா கார்களில் பாதுகாப்பு குறைபாடு?

டெஸ்லா இதுவரை விற்பனை செய்த கார்கள் அனைத்திலும் இந்த குறைபாடு உள்ளதாக தெரிகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:38 pm

DIN

தானாகவே இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, பாதுகாப்பு குறைப்பாட்டினால் இதுவரை அமெரிக்காவில் விற்பனை செய்த அனைத்து கார்களுக்கும் புதிய அழைப்பை விடுத்துள்ளது.

காரின் கட்டுப்பாட்டு திரையில் உள்ள சில எச்சரிக்கை விளக்குகள் போதிய அளவில் இல்லை என தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத் துறையின் அறிவுறுத்தலின்பேரில் டெஸ்லா இந்த அழைப்பை விடுத்துள்ளது.

டெஸ்லாவின் எஸ், எக்ஸ், வொய், 3, சைபர்டிரக் உள்ளிட்ட அனைத்து கார்களையும் அழைத்துள்ள டெஸ்லா, புதிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு துறை, டெஸ்லா கார்களில் பிரேக், பார்க்கிங், பிரேக் விடுவிப்பு ஆகியவற்றைச் சுட்டும் விளக்குகள் போதியளவில் இல்லை எனத் தெரிவித்துள்ளது. முக்கியமான பாதுகாப்பு சார்ந்த தகவல்களை வாசிக்க இயலாததால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜன.8 ஆம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் எதுவும் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.