காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அமெரிக்க அதிபர் தேர்தல்: விவேக் ராமசாமி விலகல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஜனவரி 2024, 11:05 am IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின்  சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி(வயது 37) இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும் எனக் குடியரசுக் கட்சியின் போட்டியாளா் விவேக் ராமஸ்வாமி முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.