சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வடக்குப் பகுதியில் ஹூகான் கவுன்டியில் உள்ள காடுகளில் கடந்த சனியன்று (ஏப். 12) காட்டுத் தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக இது சாங்ஷி மாகாண காடுகள் வரை பரவியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க 5 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 266 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பலத்த காற்று, சிக்கலான நிலப்பரப்பு, அடர்த்தியான தீ பரவுதல் ஆகிய காரணங்களால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

