சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வடக்குப் பகுதியில் ஹூகான் கவுன்டியில் உள்ள காடுகளில் கடந்த சனியன்று (ஏப். 12) காட்டுத் தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக இது சாங்ஷி மாகாண காடுகள் வரை பரவியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க 5 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 266 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பலத்த காற்று, சிக்கலான நிலப்பரப்பு, அடர்த்தியான தீ பரவுதல் ஆகிய காரணங்களால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குஜராத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!

வருவாய்த்துறை கூட்டமைப்பினர் சாலை மறியல்! 500க்கும் மேற்பட்டோர் கைது!

ஹோலி பண்டிகைக்கு தில்லியில் 15000 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு

மங்களபுரம் அருகே ஜல்லிக்கட்டு: 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

