பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

News image

ரஷியா அதிபர் புதின்

கோப்புப்படம்

Updated On :5 ஆகஸ்ட் 2025, 1:13 pm

தினமணி செய்திச் சேவை

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் என்றழைக்கப்படும் ரஷியா இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுஆயுதப் படைகள் (INF) ஒப்பந்தம் கையெழுத்தானது.

பனிப்போர் கால ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேறினால், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.

மேற்கு நாடுகளின் செயல்கள், தங்கள் பாதுகாப்பு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக ரஷியா கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியா - உக்ரைன் மோதலை தடுத்து நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரஷியா உடன்படாத நிலையில், ரஷியாவை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டின் அருகே நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.

கடந்த 1987ஆம் ஆண்டு அமெரிக்கா - ரஷியா இடையே, தரையிலிருந்து 500 முதல் 5,500 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் அணுசக்தி ஏவுகணை ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இரு நாடுகளும், குறைந்தது முதல் நடுத்தர தொலைவுகளைத் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அணு ஆயுதப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருந்தது.

இதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டு ரஷிய வன்முறை நடவடிக்கையின்போது, டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக முதல்முறை பதவி வகித்தபோதே, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அப்போது, ரஷியா, தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும், அமெரிக்காவும் அதுபோல செய்யக் கூடாது என்றும் கூறியிருந்தது.

ஆனால், தற்போது, ரஷியாவுக்கு அருகே, அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.