டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

நோபல் பரிசு கேட்ட..! அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான ஃபிஃபா பரிசு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதிய அமைதிக்கான பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியது குறித்து...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது - ஏபி

Updated On :6 டிசம்பர் 2025, 11:55 am IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிஃபா நிர்வாகம் நேற்று (டிச. 5) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் உலக அமைதியை வலியுறுத்தும் நபர்களுக்கு வழங்க புதியதாக அமைதி பரிசை அறிமுகப்படுத்துவதாக ஃபிஃபா நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர்நிறுத்தம் கொண்டு வந்ததற்காக, இந்தப் புதிய அமைதி பரிசை அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு, அவரது நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபாடினோ வழங்கியுள்ளார்.

இதன்மூலம், ஃபிஃபாவின் அமைதி பரிசை வென்ற முதல் நபர் எனும் பெருமையை அதிபர் டிரம்ப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, அமைதி பரிசு பெற்ற அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் தனது குடும்பத்தினருக்கு நன்றி எனக் கூறியதுடன், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாவ்டியா ஷெயின்பாம் ஆகியோரின் ஒத்துழைப்புக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இத்துடன், இந்த அமைதிப்பரிசு என் வாழ்க்கையின் மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்று என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வந்ததாகத் தொடர்ந்து கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இருப்பினும், நிகழாண்டில் (2025) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசூலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அந்தப் பரிசை அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

FIFA has awarded US President Donald Trump with the newly introduced Peace Prize.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.