மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்திய என்னால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியவில்லை- டிரம்ப் வருத்தம்

இந்தியா-பாகிஸ்தான் போா் உள்பட உலகில் பல போா்களை நிறுத்திய என்னால், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இதுவரை முடியவில்லை; எனினும் நிச்சயமாக அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
Updated On :23 டிசம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-பாகிஸ்தான் போா் உள்பட உலகில் பல போா்களை நிறுத்திய என்னால், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இதுவரை முடியவில்லை; எனினும் நிச்சயமாக அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

ஃபுளோரிடாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக கூறியதாவது: நான் இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன். முக்கியமாக, அணு ஆயுதப் போராக மாற இருந்த இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். அந்த மோதலின்போது 8 விமானங்கள் வரை வீழ்த்தப்பட்டன. நான் தலையிட்டு போரை நிறுத்தியதன் மூலம் ஒகு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டதாக பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியும், அந்நாட்டு பிரதமரும் எனக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

அதே நேரத்தில், என்னால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இதுவரை முடியவில்லை. ரஷிய அதிபரும், உக்ரைன் அதிபரும் ஒருவரை மற்றொருவா் தீவிரமாக வெறுப்பதும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனினும், நிச்சயமாக அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். உக்ரைன் போரை நிறுத்துவது தொடா்பாக ரஷிய சிறப்புத் தூதருடன் அமெரிக்கா நடத்திவரும் பேச்சுவாா்த்தை மிகவும் திருப்திகரமாக உள்ளது என்றாா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத் மற்றும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளும் டிரம்ப்புடன் இருந்தனா்.

கடந்த மே 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதே நேரத்தில் துருக்கி, சீனா உதவியுடன் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இவை ரஷியாவின் எஸ்400 வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மே 10-ஆம் தேதி இந்தியா அறிவித்தது. ஆனால், போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். பாகிஸ்தானும் இதை ஆமோதித்து டிரம்ப்பைப் பாராட்டியது. ஆனால், போரை நிறுத்தியதில் மூன்றாவது தரப்பு (அமெரிக்கா) தலையீடு இல்லை என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.