சூடானில் துணை ராணுவப் படையினரின் தாக்குதலால் 54 பேர் பலியாகினர்.
சூடானில் ஓம்டர்மேன் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 54 பேர் பலியாகினர். தாக்குதலில் பலரும் காயமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலை துணை ராணுவப் படையினர் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்த அந்நாட்டு அரசு, `சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீதான அப்பட்டமான மீறல்’ என்று தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும், மருத்துவமனை அருகில் குண்டு வீசியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் வெளியே சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும், காயமடைந்தவர்களுக்கு போதிய இடவசதியும் செவிலியர்களும் இல்லாத நிலையில், தரையிலேயே வைத்து சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதையும் படிக்க: கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!
சூடானில் சுமார் 30 ஆண்டுகளாக சா்வாதிகார ஆட்சி செய்து வந்த அதிபா் ஒமா் அல்-பஷீரை, கடந்த 2019-ஆம் ஆண்டு ராணுவம் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹிமாசலில் வாகனத்தின் மீது ராட்சதப் பாறை விழுந்ததில் 13 பேர் பலி!

சீனாவில் கடும் வெள்ளம்: 39 பேர் பலி; 1,30,000 பேர் வெளியேற்றம்!

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண்ணுக்கு எபோலா அறிகுறி!

சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



