சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

பேருந்து சுமார் 65 அடி தூரத்துக்கு உருண்டு உருக்குலைந்துள்ளது.

News image

AP

Updated On :10 பிப்ரவரி 2025, 10:21 pm IST

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் ப்ரோக்ரெசோ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்திலிருந்து திங்கள்கிழமை (பிப். 10) கீழே விழுந்த பேருந்து சுமார் 65 அடி தூரத்துக்கு உருண்டு உருக்குலைந்துள்ளது.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 30 ஆண்டுகள் பழமையானது என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 70 பேரில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் பெர்னார்டோ அரேவாலோ, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படுமென்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.