தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அமெரிக்க காா் தாக்குதல் தனிநபா் செயல்: எஃப்பிஐ

நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டார்

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:23 pm

Din

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.

முன்னதாக, அந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருக்கலாம் என்று நியூ ஆா்லியன்ஸ் போலீஸாா் கூறியிருந்த நிலையில், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் எஃப்பிஐ இவ்வாறு கூறியுள்ளது.

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான சம்சுதீன், நியூ ஆா்லியன்ஸின் புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி புதன்கிழமை திரண்டிருந்தவா்கள் மீது காரை ஏற்றி நடத்திய தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். பின்னா் அவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.