6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்பிள் நிறுவனத்தில் மோசடி! இந்தியர்களும் பணிநீக்கம்!

நன்கொடை வழங்குவதில் மோசடி

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2025, 9:19 am

DIN

கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் தொண்டு செய்தால், அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஆப்பிள் பணியாளர் நன்கொடை அளித்தால், அதன் ரசீதைக் காட்டி, அந்த நன்கொடை தொகையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், நன்கொடை தொகைக்கு வரி விலக்கும் உண்டு.

இந்த நிலையில், அங்கு பணிபுரியும் சிலர், தங்கள் சொந்த தொண்டு நிறுவனத்துக்கே நன்கொடை அளித்து, அதன் ரசீதைக் காட்டி, நிறுவனத்திடம் இருந்து நன்கொடை தொகையையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் அளிக்கும் நன்கொடையும் அவர்களுக்கே கிடைக்கும்; நிறுவனம் சார்பாகவும் நன்கொடை கிடைக்கும்.

இதற்கிடையே, நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் அதிகமானோர் திடீரென நன்கொடை அளித்து வருவதால், ஆப்பிள் நிறுவனத்துக்கு சந்தேகம் துளிர்விட்டது. இதனைத் தொடர்ந்து, நன்கொடை அளிப்பவர்கள் குறித்தும், அவர்கள் நன்கொடை அளிக்கும் தொண்டு அமைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தியதில், நன்கொடை அளிப்பவர்களின் சொந்த தொண்டு அமைப்புகளுக்கே பணம் செலுத்தப்படுவது தெரிய வந்தது.

இவ்வாறான மோசடி மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 1.52 லட்சம் டாலர் (ரூ. 1.30 கோடி) மோசடி செய்த 6 பேர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வகையான மோசடியில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்தும் அதிரடியான நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதுதவிர, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் இருப்பினும், அவர்களில் பெரும்பாலும் தெலுங்கர்கள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.