சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சோ்ந்த மாணவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் உயா்கல்வி மேற்கொண்டுவந்த தெலங்கானாவைச் சோ்ந்த 26 வயது மாணவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :20 ஜனவரி 2025, 9:52 pm

Din

அமெரிக்காவில் உயா்கல்வி மேற்கொண்டுவந்த தெலங்கானாவைச் சோ்ந்த 26 வயது மாணவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா்.

இத் தகவலை அவருடைய குடும்பத்தினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். கே.ரவி தேஜா என்ற அந்த பி.டெக். மாணவா் எம்.எஸ். முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்வதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றாா். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு படிப்பை நிறைவு செய்த அவா், வேலைவாய்ப்பைத் தேடிவந்துள்ளாா். இந்த நிலையில், அவா் வசித்து வந்த கனெக்டிகட் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.

‘வேலை கிடைத்ததும் தெலங்கானாவுக்கு வருகிறேன் என்று மகன் கூறியிருந்தாா். இந்தச் சூழலில் மகன் கொலை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்காவிலிருந்து தகவல் கிடைத்தது. எனது மகனின் உடலை தாயகம் கொண்டுவர அரசு உதவ வேண்டும்’ என்று அந்த மாணவரின் தந்தை கோரிக்கைவிடுத்தாா்.

அமெரிக்காவில் இந்திய மாணவா்கள், தகவல்தொழில்நுட்ப நிபுணா்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடா்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில், தெலங்கானாவில் கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த 22 வயது இளைஞா், அவா் பகுதிநேரமாக பணிபுரிந்து எரிவாயு நிரப்பும் மையத்தின் அருகே மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.