
மியான்மரில் வியாழக்கிழமை நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது வியாழக்கிழமை நள்ளிரவு 12.53 மணியளவில் பூமியில் இருந்து 108 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானது.
மேலும், நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.