சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

சர்வதேச அளவிலான அங்கீகாரங்களை டிரம்ப் அழிக்கிறாரா? நெட்டிசன்கள் கேள்வி!

வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலையின் பெயரை மெக்கின்லி என்று டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்தார்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2025, 6:09 pm IST

வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே கனடா, கிரீன்லாந்து நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்க முயன்ற டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்யுமாறு வற்புறுத்தினார்.

இந்த நிலையில், பதவியேற்ற சில நாள்களிலேயே மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்ததுடன், தற்போது வட அமெரிக்காவில் உள்ள மிக உயரமான மலையான டெனாலி மலையின் பெயரையும் மாற்றியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் வில்லியம்ஸ் மெக்கின்லியின் நினைவைப் போற்றும்விதமாக, அவரது பெயரையே டெனாலி மலைக்குச் சூட்டி, மெக்கின்லி மலை என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

அமெரிக்க பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், அமெரிக்க வரலாற்று நாயகர்கள் மற்றும் வரலாற்று சொத்துகளை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் நோக்குடன்தான் இவ்வாறான பெயர் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ’பூர்வீக மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்தான் இவை’ என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.