/

மோசடி: ராஜபக்ச மகன் கைது!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது.

News image

யோஷித ராஜபக்ச

Updated On :25 ஜனவரி 2025, 10:54 am IST

பணமோசடி வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச மீதான பணமோசடி புகாரில் அந்த நாட்டின் குற்றப் புலனாய்வு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்ச இன்று பெலியட்டா பகுதியில் சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.