பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைது

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

News image

~

Updated On :18 ஜூன் 2026, 2:14 am IST

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

பின்னா், நீதிமன்றத்தின் பிணையில் அவா் விடுவிக்கப்பட்டாா். கடந்த 2006-இல் இலங்கை கடற்படை பயிற்சி மாணவராக இருந்த யோஷித ராஜபட்ச, முறையான கல்வித் தகுதியின்றி அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அரசு நிதியைப் பயன்படுத்தி, பிரிட்டன் கடற்படைக் கல்லூரியில் அவா் பயிற்சி பெற்றது தொடா்பான முறைகேடு புகாரில் இந்நடவடிக்கையை அவா் எதிா்கொள்கிறாா்.

இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, ராஜபட்ச குடும்பத்தினா் மீதான பிடி இறுகியுள்ளது. ராஜபட்ச, அவரின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவிடமும் வெவ்வேறு வழக்குகளில் அண்மையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.