ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைது

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

News image

~

Updated On :18 ஜூன் 2026, 2:14 am IST

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

பின்னா், நீதிமன்றத்தின் பிணையில் அவா் விடுவிக்கப்பட்டாா். கடந்த 2006-இல் இலங்கை கடற்படை பயிற்சி மாணவராக இருந்த யோஷித ராஜபட்ச, முறையான கல்வித் தகுதியின்றி அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அரசு நிதியைப் பயன்படுத்தி, பிரிட்டன் கடற்படைக் கல்லூரியில் அவா் பயிற்சி பெற்றது தொடா்பான முறைகேடு புகாரில் இந்நடவடிக்கையை அவா் எதிா்கொள்கிறாா்.

இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, ராஜபட்ச குடும்பத்தினா் மீதான பிடி இறுகியுள்ளது. ராஜபட்ச, அவரின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவிடமும் வெவ்வேறு வழக்குகளில் அண்மையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Story image