திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவ விமானம் சோமாலியாவில் விபத்து!

சோமாலியா நாட்டில் சிறிய ரக ராணுவ விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2025, 3:50 pm IST

சோமாலியா நாட்டில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவிலுள்ள விமான நிலையத்தில், இன்று (ஜூலை 2) ஆப்பிரிக்க ஒன்றிய ராணுவத்தின் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது, விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சோமாலியா அதிகாரிகள் அந்த தீயை அணைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தச் சம்பவம் குறித்தும், விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்தும் எந்தவொரு தகவலும் அந்நாட்டு அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, சோமாலியாவில் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவத்தில், கென்யா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் படைகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.