ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா்.

News image
Updated On :11 ஜூலை 2025, 9:20 pm

Din

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா்.

இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஜோப் மாவட்டத்தின் சூா்-தகை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை நிறுத்திய பயங்கரவாதிகள், அவற்றில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளைச் சோதித்தனா். பின்னா் அவா்களில் 9 பேரை பேருந்தில் இருந்து இறங்கச் செய்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். உயிரிழந்த அனைவரும் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

அவா்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிக்க நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினா் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு, தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்) பொறுப்பேற்றுள்ளது. ஏற்கெனவே, பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி அதில் பயணித்த ஏராளமான வேற்று மாகாணத்தவா்களை பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனா். மேலும், பாதுகாப்புப் படையினா் மீதும் அவா்கள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளனா்.