சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியாவில் 35 பிணைக் கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார்ச் மாதம் குற்றவாளிக் குழுக்கள், சுமார் 56 கிராமவாசிகளைக் கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 655 டாலர் (ரூ.57,000) அளவிலான பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் கேட்ட பணம் முழுவதும், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, கடத்தப்பட்ட 52 பிணைக் கைதிகளில் ஒரு சிறுவன், 17 பெண்கள் என 18 பேரைக் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.

ஆனால், மீதமுள்ள பிணைக் கைதிகள் சுமார் 38 பேரைக் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை செய்ததாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில், பிணைக் கைதிகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்ற காரணம் தெரியாத நிலையில், அதைக் கடத்தல்காரர்கள் மட்டுமே அறிவார்கள் என்று உள்ளூர் அரசின் தலைவர் மன்னிரு ஹைதரா கௌரா கூறியுள்ளார்.

தற்போது விடுதலைச் செய்யப்பட்டவர்களில், 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் சூழலில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற குற்றங்களில் கொலைச் செய்யப்படும் பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்படுவது, இயலாத ஒன்று என நைஜீரியா அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

In Nigeria, kidnappers reportedly shot and killed around 35 hostages, despite being paid.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.