சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் உறுதி

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின.

News image
Updated On :31 ஜூலை 2025, 1:49 am IST

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்கான உறுதிமொழி அளித்தனா்.

இரு நாட்டுப் படையினருக்கும் கடந்த வாரம் தொடங்கிய மோதலில் 41 போ் உயிரிழந்த நிலையில், மலேசியா செய்துவைத்த மத்தியஸ்தின் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தம் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

ஆனால் அதை செவ்வாய்க்கிழமை காலை கம்போடியா மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியது. பின்னா் புதன்கிழமை காலையும் எல்லையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை இணையமச்சா் சன் வெய்டோங்கைச் சந்தித்து சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக இரு தரப்பினரும் தற்போது உறுதி செய்துள்ளனா் (படம்). மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் இதை ‘அமைதிக்கான முதல் படி’ எனப் பாராட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.