அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பற்றி...

News image
காஸாவில்....- AP
Updated On :7 ஜூன் 2025, 11:22 am

DIN

காஸா மீது இஸ்ரேல் இன்று(சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் போர் தீவிரமடைந்து வருகிறது.

காஸாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர். ஐ.நா. அமைப்பு காஸாவில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வரும் நிலையில், உணவைத் தேடிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளான இன்றும் காஸா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

Story image

இஸ்ரேலின் இன்றைய வான்வழித் தாக்குதலில் 34 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை ரஃபா எல்லை அருகே அல்-அகாவா பகுதியில் உணவு மையத்தை நோக்கிச் சென்ற 8 பேர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

ஈத் திருநாளையொட்டி பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டனர். இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான மசூதி இருந்த பகுதிகளில் தொழுகை செய்தனர்.

பாலஸ்தீனத்தில் தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள்.

பாலஸ்தீனத்தில் தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள்.

நேற்று காஸாவில் உணவு விநியோகிக்கும் இடத்தில் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story image

காஸா மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தேவையான நாப்கின் உள்ளிட்டவை கிடைப்பதில்லை என ஐக்கிய நாடுகள் நிவாரண நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.