தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!

உக்ரைனில் சனிக்கிழமை அதிகாலையில் ரஷியா ட்ரோன் மழை பொழிந்தது

News image
Updated On :7 ஜூன் 2025, 11:10 am

DIN

கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு - சனிக்கிழமை அதிகாலையில் ரஷியா ட்ரோன் மழை பொழிந்தது. துல்லியமாக இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும் உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷிய விமானப்படைகள் 215 ஏவுகணைகள், ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் 87 ட்ரோன்களையும் 7 ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷியாவின் வான்வழி தாக்குதல்களில் கார்கிவ் நகரில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் பச்சிளங் குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.