நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.
அப்துல் ஹமீது
அப்துல் ஹமீதுகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசினாவின் ஆட்சிக் காலத்தின்போது இரண்டு முறை அதிபராக இருந்தவா் அப்துல் ஹமீது (81). அவருக்கு எதிராக கொலை வழக்கு உள்ள நிலையில் அவா் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், கடந்த மே 8-இல் அவா் தாய்லாந்துக்குச் சென்ற விவரம் பின்னா்தான் தெரியவந்தது. அதையடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் இரு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சுங்கத் துறை அதிகாரி ஒருவா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்தச் சூழலில், அவா் பிரதம் ஆலோ விமான நிலையத்தை திங்கள்கிழமை அடைந்ததாகவும், அப்போது, அவரது மகன் மற்றும் சகோதரா் உடன் இருந்தனா் என்றும் டாக்கா ட்ரிபியூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com