தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

ஈரானில் ரஷியா 8 புதிய அணு உலைகளை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2025, 6:00 am

DIN

ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில் ரஷியாவல் 8 புதிய அணு உலைகள் கட்டப்படும் என நேற்று (ஜூன் 9) அந்நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் முஹம்மது எஸ்லமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 8 அணு உலைகளில் 4 உலைகள் ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள புஷேர் மாகாணத்தில் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், புஷேர் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 2,3 உலைகள் ஈரான் நிறுவனங்களால் கட்டப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவின் உதவியோடு கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்ட புஷேர் அணுமின் நிலையம் ஈரானில் நாட்டில் இயங்கிவரும் முதல் மற்றும் ஒரே அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.