தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நிலவும் குளிர்ந்த வானிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த வெள்ளத்தால் 6 பள்ளிக்குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளதாக, அம்மாகாண ஆளுநர் ஆஸ்கார் மபூயானே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்த கனமழையால், அம்மாகாணத்தின் ஆற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, நேற்று (ஜூன் 10) குழந்தைகளுடன் வந்த பள்ளிவாகனம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
இதில், 10 பள்ளிக்குழந்தைகள் மாயமான நிலையில், 6 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும், 4 குழந்தைகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கிய புயல் மற்றும் அதைத் தொடர்ந்த கனமழையால், சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

கொச்சியில் வீட்டிலிருந்து 5 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

எதிரே வந்த மினி வேன், பைக் மீது மோதிய அரசுப் பேருந்து! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!
தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

